புகைப்படக் கலைஞர்கள் மீது எனக்கு எப்போதுமே நிறைய ஈடுபாடு உண்டு. கூடவே கொஞ்சம் பொறாமையும் உண்டு. காரணம் அவர்களின் கண்கள் சிறப்பானவை. நம் கண்கள் காணத்தவறிவிடும் சில அபூர்வக் காட்சிகளை அவர்களின் கண்கள் கண்டுவிடும். லென்ஸ் வழியே பார்ப்பது மட்டுமல்ல, சாதாரணமாகவே பார்த்தாலும் ஒரு காமிராக் கலைஞனின் பார்வையில் நிச்சயம் ஒரு கலையழகு மிளிரும் இதை நான் பல புகைப்படக் கலைஞர்களிடம் கண்டு வியந்திருக்கிறேன்