இமயமலைப்பகுதிகள் முதல், கேரளத்து மூணாறு வரை, சில பயணங்களை மேற்கொள்ளும் சமயத்தில் வாய்ப்புக் கிடைத்தது மகான் பாபாஜி, பத்மஸ்ரீ நல்லி செட்டியார், நண்பர் சாருகேசி போன்றோருடன் பயணம் செய்து உணர்ந்த பயண அனுபவங்கள் யுவன் சங்கர் இசை நிகழ்ச்சியை படம் எடுக்க என் குடும்பத்தோடு துபாய் சென்று வந்த இனிய அனுபவங்களும் பசுமையானவை. அவற்றை இங்கே சில, கட்டுரைகளாக எழுதியுள்ளேன். இதில் ஆன்மிக அனுபவங்களும் உண்டு.
என்னுடைய எட்டாவது நூல் இது எப்படி சாத்தியமாகியது என்றே தெரியவில்லை. இறைவன் அருளாலும் என்பால் ஈடுபாடு கொண்டுள்ள பெரியோர்கள் அன்பர்கள் ஆதரவாலுமே எல்லாம் நடைபெறுகின்றன என்றே உணர்கிறேன்.