‘அன்பெனும் தோட்டத்திலே!’ - நிரந்தரமாய் வாழ்கின்ற ஒருவரால்தான் இப்படியொரு புத்தகத்தைப் படைத்திட இயலும். மாமனிதர்களின் முகங்களை மட்டுமே தனது காமிராவினால் பதிவு செய்து விட்டு ஒதுங்கி விடாமல், அவர்களின் அற்புத இதயத்தையும் தன் மனத்திற்குள் பதிவு செய்து கொண்டு, இங்கே மணக்க மணக்க அவர்கள் அனைவரின் உயர்வகைச் சிறப்புகளையும், அன்பு சுரக்கும் உணர்வோடு பதிவு செய்திருக்கிறார் கலைமாமணி யோகா.
என்றுமே கண்களை விட்டு அகலாத சிறப்புக்குரிய புகைப்படங்களை மட்டுமே தருகிறவர், அவர் மனத்தை விட்டு என்றுமே நீங்காத அவரது பெருமதிப்பிற்குரிய வல்லவர்களையும், சாதனையாளர்களையும் அவர்களின் அன்பு சுரக்கும் மனிதச் சிறப்புக்களையும் அவர் எழுதியதைப் படிக்கும்போது பல இடங்களில் என் கண்கள் ஈரமானது சத்தியம்