Udaintha Nilakkal Part 2

· Pustaka Digital Media
5,0
Водгукаў: 2
Электронная кніга
348
Старонкі
Ацэнкі і водгукі не спраўджаны  Даведацца больш

Пра гэту электронную кнігу

வாசகர்களுக்கு வணக்கம்

உடைந்த நிலாக்கள் பாகம் 2 என்பது
உடைந்த நிலாக்கள் பாகம் 1-ன் வெற்றியால்
வெளிச்சப்பட்ட ஒன்றல்ல...

நெடுநாள் தவம்!

சின்ன வயசின் பள்ளிச்சீருடை நாட்களில்
உள்மனசுக்குள் உலா வந்த
பறக்கும் கம்பள ராஜகுமாரர்களும்
பாக்தாத் பேரழகிகள் பற்றிய
அம்புலிமாமா கதைகளும்
எனக்குள் ஒரு சரித்திர தாகத்தை தோற்றுவித்தது.

கனவுகளில் எத்தனையோ போர்கள் நிகழ்ந்து
கத்தி சத்தம் உளறலாய் வெளிப்பட்டிருக்கிறது!

இந்த உணர்வு மெல்லப் படியேறிப் படியேறி
வரலாற்று நாவல்களை கரைத்துக் குடிக்கும்
மனோநிலைக்கு என்னைத் தள்ளியது!

மந்திர தந்திர ஜாலங்கள் நிரம்பிய அந்த அம்புலிமாமா உலகில் இருந்து நான் உயர்ந்து தமிழ் மன்னர்களின், வீர புருஷர்களின் வாழ்க்கையை
எழுத்தாய் வாசிக்கும் போது உதிரத்தில் இறங்கி உயிரில் குளம் கட்டித் தேங்கியது!

சாண்டில்யன் அவர்களின் வர்ணணைகளில் வழுக்கி விழுந்து அந்த எழுத்து நடைக்குள் புதைந்து எழுந்து திடீர் திருப்பங்களில் திக்குமுக்காடி,
வரலாறு வகுக்கப்பட்ட வியூகங்களில் வியப்பின் விளிம்பு தடவி நெகிழ்ந்த அனுபவமும்...

கோவி.மணிசேகரன் அவர்களின் கவிதைப் பூச்சு பூசப்பட்ட சரித்திர தொடர்களில் ஐக்கியமாகி, பைத்தியமாகி, புத்தி பேதலித்து தலைக்
கிறுக்கோடு திரிந்து எனக்குள் நிகழ்ந்த வரலாற்றுக் காதலும்...

கல்கி அவர்களின் எதார்த்தமான எழுத்துக்குள் சரித்திரம் சித்து விளையாட்டு விளையாடி வாசிப்பவரின் கண்களுக்குள் காட்சி வந்து
விரிந்து மலர்ந்து நேருக்கு நேர் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திய பாதிப்பும்...

எனக்கு சரித்திரம் சொல்ல வேண்டும் என்ற கனவை உள் வெளி அகம் புறம் எங்கும் அலைபாயச் செய்தது! அந்த அலையோட்டத்தின் சிறுசிறு ஆர்ப்பரிப்பே என் உடைந்த நிலாக்கள் பாகம் 2 என்ற இந்தப் புத்தகம்!

உடைந்த நிலாக்கள் பாகம் 1, ‘பாக்யா’ வார இதழில் வெளியாகி கவிதை சிம்மாசனத்தில் அமர்ந்து வீதிஉலா வந்தது போலவே உடைந்த நிலாக்கள் பாகம் 2-ம் 'பாக்யா’ வார இதழில் மதிப்பிற்குரிய என் ஆசான் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் ஒத்துழைப்போடும் வாசகர்களின் கைதட்டல்களோடும் வெளியாகி இப்போது முழுவடிவப் புத்தகமாய் மொட்டவிழ்ந்திருக்கிறது!

இந்தப் புத்தகம் ஒரு தனித்துவத்தோடு விளங்க முகப்பு அட்டையை முனைப்போடு வடிவமைத்துக் கொடுத்த இனிய நண்பர் டிசைனர் சசி அவர்களுக்கும், இந்த நிஜம் சார்ந்த கவிதை கதைகளுக்கு நிழலோவியம் தந்து மெருகு கூட்டும் ஓவியர் ஷாம் அவர்களுக்கும், என் நட்சத்திர எண்ணிக்கையிலான நன்றிகள்!

இதோ இனி உங்கள் களம்!

சரித்திரம் சார்ந்த காதலின் வேர் முனையில் இருந்து வழியும் நிஜத்தின் தேன் பருக உங்கள் பட்டாம்பூச்சி கண்கள் பயணப்படட்டும்...

வணக்கங்களுடன்
பா.விஜய்

Ацэнкі і агляды

5,0
2 водгукі

Звесткі пра аўтара

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Ацаніце гэту электронную кнігу

Падзяліцеся сваімі меркаваннямі.

Чытанне інфармацыb

Смартфоны і планшэты
Усталюйце праграму "Кнігі Google Play" для Android і iPad/iPhone. Яна аўтаматычна сінхранізуецца з вашым уліковым запісам і дазваляе чытаць у інтэрнэце або па-за сеткай, дзе б вы ні былі.
Ноўтбукі і камп’ютары
У вэб-браўзеры камп’ютара можна слухаць аўдыякнігі, купленыя ў Google Play.
Электронныя кнiгi i iншыя прылады
Каб чытаць на такіх прыладах для электронных кніг, як, напрыклад, Kobo, трэба спампаваць файл і перанесці яго на сваю прыладу. Выканайце падрабязныя інструкцыі, прыведзеныя ў Даведачным цэнтры, каб перанесці файлы на прылады, якія падтрымліваюцца.