“என் கோபத்தைக் கிளறாதே மதுசூதனா. தேவையின்றி வார்த்தைகளைத் தெறிக்க விடாதே! உன்னை அப்படியொரு எண்ணத்தில் வரச் சொல்லவில்லை. ஆண்டவன் சத்தியமாகச் சொல்கிறேன். உன்னை அப்படியொரு எண்ணத்தில் அங்கே வரவழைக்கவே இல்லை.”
“ஸ்டுப்பிட்! இந்தக் கேடுகெட்ட விஷயத்திற்கு ஆண்டவன் பெயரை எடுக்காதே. ரிஸார்ட்டில் அந்த ஆள் சொன்னதை வைத்துப் பார்த்தால், நிறைய பெண்களை ‘அந்த மாதிரி’ எண்ணத்தில், நீ வரச் சொன்னதாகத் தானே அர்த்தம். மனைவியை இழந்த துக்கத்தைத் தீர்க்க, இப்படியொரு வழி. ரிஸார்ட்டுக்கு அடிக்கடி செல்கிறேன் என்று நீ சொன்னதன் பொருள் இப்போதல்லவா எனக்குப் புரிகிறது. ஆப்பைத் தேடி அமர்ந்த பிறகு வாய்ஜாலம் எதற்கு? நல்லவேளை. கடவுள் என்பக்கம் இருக்கிறார். மறுமணத்திற்கு முன்பு உன் யோக்கியதை தெரிய வந்ததால் தப்பித்தேன்.”
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.