இப்ப சொல்றேன்... மறுபடியும் சொல்றேன்... லவ் யூ... லவ் யூ... லவ் யூ..! என்ன பண்ணமுடியுமோ பண்ணு போ..!”
தன் காதலை மிக அழுத்தமாய் சொன்னவன், உஷ்ணமாய் பார்த்துக்கொண்டே தங்கையிடம் அலைபேசியைத் தூக்கியெறிய...
அதே திமிருடன் அண்ணனை முறைத்தவள், “ஸாரி பிரக்ஞா... நான்...” என்று ஆரம்பிக்கும் முன், அலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
“இனிமே எனக்கும், அவளுக்கும் நடுவுல... நீ வரக்கூடாது... புரியுதா?” என்று மதி ஆவேசமாய் சொல்ல, அதிர்ந்து பார்த்தாள் சுஜேஸ்வரி.
மற்றவை கதையில்!
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.