Enni Irunthathu Edera... Part - 2

· Pustaka Digital Media
၄.၀
သုံးသပ်ချက် 1
E-စာအုပ်
313
မျက်နှာ
အဆင့်သတ်မှတ်ချက်နှင့် သုံးသပ်ချက်များကို အတည်ပြုမထားပါ  ပိုမိုလေ့လာရန်

ဤ E-စာအုပ်အကြောင်း

எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்...

இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும்.

இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்...

ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்...

ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...!

எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...!

சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...

အဆင့်သတ်မှတ်ခြင်း၊ သုံးသပ်ခြင်း

၄.၀
သုံးသပ်ချက် 1

စာရေးသူအကြောင်း

நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.

நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.

15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.

ဤ E-စာအုပ်ကို အဆင့်သတ်မှတ်ပါ

သင့်အမြင်ကို ပြောပြပါ။

သတင်းအချက်အလက် ဖတ်နေသည်

စမတ်ဖုန်းများနှင့် တက်ဘလက်များ
Android နှင့် iPad/iPhone တို့အတွက် Google Play Books အက်ပ် ကို ထည့်သွင်းပါ။ ၎င်းသည် သင့်အကောင့်နှင့် အလိုအလျောက် စင့်ခ်လုပ်ပေးပြီး နေရာမရွေး အွန်လိုင်းတွင်ဖြစ်စေ သို့မဟုတ် အော့ဖ်လိုင်းတွင်ဖြစ်စေ ဖတ်ရှုခွင့်ရရှိစေပါသည်။
လက်တော့ပ်များနှင့် ကွန်ပျူတာများ
Google Play မှတစ်ဆင့် ဝယ်ယူထားသော အော်ဒီယိုစာအုပ်များအား သင့်ကွန်ပျူတာ၏ ဝဘ်ဘရောင်ဇာကို အသုံးပြု၍ နားဆင်နိုင်ပါသည်။
eReaders နှင့် အခြားကိရိယာများ
Kobo eReader များကဲ့သို့ e-ink စက်ပစ္စည်းပေါ်တွင် ဖတ်ရှုရန် ဖိုင်ကို ဒေါင်းလုဒ်လုပ်ပြီး သင့်စက်ထဲသို့ လွှဲပြောင်းပေးရမည်။ ထောက်ပံ့ထားသည့် eReader များသို့ ဖိုင်များကို လွှဲပြောင်းရန် ကူညီရေးဌာန အသေးစိတ် ညွှန်ကြားချက်များအတိုင်း လုပ်ဆောင်ပါ။